சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் சுவர் இடிந்து விழுந்து பலியானவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- கலெக்டரிடம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மனு

ஈரடுக்கு மேம்பாலத்தின் பராமரிப்பு பணி ரூ.2.83 கோடியில் நடை பெற்று வருகிறது.பாலத்தின் சுவர் எப்படி இடிந்து விழுந்தது என்ற உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தபோது எடுத்த படம்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தபோது எடுத்த படம்.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டர் கார்த்திகேய னிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் பராமரிப்பு பணி மாநகராட்சி நிர்வாக த்தால் ரூ.2.83 கோடியில் நடை பெற்று வருவதாக அறிகிறோம். அந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தாரர் எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்லது பாதுகாப்பு வளையங்களோ ஏற்படுத்தாமல் திறந்த வெளியில் மக்கள் நடமா ட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இது போன்ற பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தொந்தரவு ஏற்படும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் ஒப்பந்ததாரர் மற்றும் அதை கண்காணிக்க கூடிய மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாக கடந்த 3-ந் தேதி கொக்கிர குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற முதியவர் இந்த பாலத்தின் அருகே சென்றபோது அதன் பக்கவாட்டு சுவரில் கல் இடிந்து விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்தக்காரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது அலட்சியப் போக்கு மற்றும் மரணத்தை உண்டாக்குதல் போன்ற பிரிவுகளில் நடவடி க்கை எடுக்க வேண்டி அவரது உறவி னர்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுப்பதில் தா மதம் செய்து வருகின்றனர்.

அந்த பாலத்தின் சுவர் எப்படி இடிந்து விழுந்தது என்ற உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். அலட்சியப்போக்கால் ஏற்பட்ட இந்த உயிரிழப்பி ற்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடாக அந்த முதியவரின் குடும்பத்தி னருக்கு வழங்க வேண்டும். மேலும் அலட்சி யமாக செயல்பட்ட அதிகா ரிகள் மீது துறை ரீதியான நடவடி க்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

அப்போது அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட துணை செய லாளர் பள்ளமடை பால முருகன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் பால் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. ஆதித்தன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துபாண்டி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடா சலம், திருத்து சின்னத்துரை, ஒன்றிய செயலாளர் ராம சுப்பிர மணியன், கவுன்சிலர் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் ஜெய்சன் புஷ்பராஜ், பாறையடி மணி, டால் சரவணன், தாழை மீரான், மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் விக்னேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com