தேன்கனிக்கோட்டை அருகே கொலை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தேன்கனிக்கோட்டை அருகே கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி மீது குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிக்குட்பட்ட மாரச்சந்தி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 30). 

அதேபகுதியில் குடியிருந்து வந்தவர் சுரேஷ் என்ற கெம்பன். இவர்கள் இருவரும் நண்பர்கள் மற்றும் பிரபல ரவுடிகள்  ஆவர். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 20-ந் தேதி இரவு மாரசந்திரம் கிராமத்தில் இரவு ஏலச்சீட்டு நடந்துள்ளது.

இதில்  மகேஷ்குமாருக்கும் கெம்பனுக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ்குமார்  மற்றும் நண்பர்கள் சேர்ந்து கெம்பனை குத்திக்கொலை செய்தனர் .

இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமாரைக் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில் மகேஷ் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவு பிறப்பித்தார். 

இதற்கான நகல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகேஷ்குமாரிடம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com