search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரும்பூர் அருகே  ரேஷன் அரிசி  பதுக்கிய ரைஸ்மில் உரிமையாளர் கைது
    X

    குரும்பூர் அருகே ரேஷன் அரிசி பதுக்கிய ரைஸ்மில் உரிமையாளர் கைது

    • இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான குழுவினர் குரும்பூர் ரெயில் நிலையம் அருகே சோதனை செய்தனர்.
    • அப்போது 8 மூட்டைகளில் மொத்தம் 320 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கோட்டைச் சாமி தலைமையி லான குழுவினர் குரும்பூர் ெரயில் நிலையம் அருகே சோதனை செய்தனர்.

    அப்போது 8 மூட்டைகளில் மொத்தம் 320 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் குற்றம் சாட்டப் பட்டவர், குரும்பூர் மற்றும் நாலுமாவடி பகுதிகளில் இருந்து, கால்நடை தீவனத் தில் லாப நோக்கத்திற்காக ரேஷன் அரிசியை சேகரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக கருங்குளம் மதன் கோவில் தெருவை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் வெங்கடேஷ் (23) என்பவரை கைது செய்தனர்

    Next Story
    ×