

தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை நெற்களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பிரதமரின் ''மனதின் குரல்'' ஒலிபரப்பு நிகழ்ச்சி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தலைமையில் நடந்தது. நெற்களஞ்சியத்தின் முதன்மை அலுவலர் வெள்ளிமலர் முன்னிலை வகித்தார்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த கமலா வரவேற்றார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில் நுட்ப அலுவலர் வெங்கடேசுவரி மொழிபெயர்த்தார். இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட விவசாய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.