மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்-கண்காணிப்பாளர் ஆய்வு

மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு ஆய்வு செய்தார். அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி பசும்பொன் வருகை தருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல் அமைச்சர் தனிப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகை யில்:-

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்திற்கு வந்து செல்லும் வரை இருவழியி லும் பணி மேற்கொள்ளும் அலுவலர்கள் திட்டமிட்ட படி கவனமுடன் செயல்பட வேண்டும். மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் முன் கூட்டியே தலைமை அலு வலர்களுக்கு தகவல் தெரி வித்து, ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். முதல் அமைச்சர் நினைவிடத்திற்கு வருகை தந்து செல்லும் வரை திட்டமிட்டபடி பணி களை மேற்கொண்டு எந்த இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com