search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு
    X

    காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு

    • காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு நடந்தது.
    • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோட்டை முத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறுபான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராகிம், மாவட்ட அமைப்பு சாரா தலைவர் முத்துவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சிக்கல் நகர் செயலாளர் அம்ஜத் கான், சிக்கல் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆர்தர், பச்சமால், நிர்வாகிகள் செய்யது இப்ராகிம், கனி, முனியசாமி, குமைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×