search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பயிர் கடன்
    X

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு நடமாடும் வங்கி சேவையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விவசாயிகளுக்கு பயிர் கடன்

    • விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.300 கோடி குறியீடு செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நடமாடும் வாகன வங்கி சேவையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் உர ஆய்வாளர்கள், உர உற்பத்தியாளர்கள், தொடக்க வேளாண் கடன் சங்க செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி, வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார்.

    அப்ேபாது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டம், பின் தங்கிய மாவட்டம் என சொல்லி வந்த நிலையை மாற்றி கடந்த காலங்களில் வேளாண்மைத் துறையின் மூலமும், கூட்டுறவுத் துறையின் மூலமும் பல்வேறு திட்டங்களை வழங்கி இன்றைய காலத்தில் விவசாயிகள் பல்வேறு தொழில் நுட்பங்களுடன் சிறந்த முறையில் விவசாய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    அந்த வகையில் மேலும் விவசாய பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள ஏதுவாக நடப்பாண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகள் பெற்று பயன்பெறவும் ரூ.300 கோடி கடன் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    வேளாண்மைத்துறை அலுவலர்கள் வட்டார அளவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன்களை வழங்கி ஒதுக்கீடு பெறப்பட்ட ரூ.300 கோடி விவசாயிகளுக்கு சென்றடைந்தன என்பதை கூட்டுறவுத்துறையும், வேளாண்மைத்துறையும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் கிராமப் பகுதியில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நடமாடும் வாகன வங்கி சேவையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    Next Story
    ×