search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தாக்கி வீட்டை சேதப்படுத்திய 2 பேர் கைது
    X

    பெண்ணை தாக்கி வீட்டை சேதப்படுத்திய 2 பேர் கைது

    • பெண்ணை தாக்கி வீட்டை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
    • மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஒச்சத் தேவன்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி முனீஸ்வரி (வயது49). இவர்களது மகன் கோட்டைச்சாமி (26) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (28) என்பவருக்கும் முன்பகை இருந்தது.

    இந்த நிலையில் சண்முக நாதன் தனது நண்பர்கள் சிவபாரதி (20), முத்து ராமலிங்கம் (28) ஆகியோ ருடன் பொன்னையா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் முனீஸ்வரி தனியாக இருந்தார். அவரை 3 பேரும் சேர்ந்து அவதூறாக பேசி அடித்து கீழே தள்ளி விட்டனர். பின்னர் வீட்டின் ஓடுகளை கம்பால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அங்கிருந்த டிராக்டரில் ஏறி தப்பி சென்றனர். டிராக்டரை அருகே உள்ள கருவேல மர காட்டுப்பகுதியில், நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவிலாங் குளம் போலீஸ் நிலையத் தில் முனீஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாரதி மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×