search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரும்பூர் அருகே திருமண வீட்டில் தகராறு;3 பேர் கைது
    X

    குரும்பூர் அருகே திருமண வீட்டில் தகராறு;3 பேர் கைது

    • குரும்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமணத்தில் கறி விருந்து சாப்பிடுவதில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • தகவல் அறிந்த குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை சேதப்படுத்திய குருகாட்டூரை சார்ந்த பணிமயராஜ், வெங்கடேசன் மற்றும் முக்காணி சேர்ந்த அரிபுத்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

    குரும்பூர்:

    குரும்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமணத்தில் கறி விருந்து சாப்பிடுவதில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    தகராறில் ஈடுபட்ட ஒரு சிலர் சுப்ரமணியபுரம் மாணிக்கம் மனைவி ராமலட்சுமி (வயது 75) என்பவரின் வீட்டிற்கு சென்று, உனது பேரனை வெளியே அனுப்பி வை என கூறி அவரின் வீட்டை சேதப்படுத்தி உள்ளனர்.

    தகவல் அறிந்த குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை சேதப்படுத்திய குருகாட்டூரை சார்ந்த பணிமயராஜ், வெங்கடேசன் மற்றும் முக்காணி சேர்ந்த அரிபுத்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×