search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவடிபண்ணை அரசு பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு
    X

    முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.

    மாவடிபண்ணை அரசு பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு

    • ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் தங்கவேல் பூபதி தலைமை தாங்கினார்.
    • 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.

    தென்திருப்பேரை:

    மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் 12-ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் பிரிய தர்ஷனி, பிரேமா மற்றும் பொன் ராதா, 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் சுஜி, சுமதி, சஹானா ஆகியோர்களுக்கு பரிசுகள் மற்றும் பொன்னா டை அணிவித்து பாராட்டு கள் தெரிவிக்க ப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.

    நிகழ்ச்சியில் ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் தங்கவேல் பூபதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜி முன்னிலை வகித்தார்.

    தென்திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் ராஜகுமார் வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கிங்ஸ்லி நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்தார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், ராஜாதி பஞ்சாயத்து தலைவர் சவுந்திரராஜன், சேதுக்கு வாய்தான் பஞ்சாயத்து தலைவர் சுதா சீனிவாசன், குருகாட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராணி ராஜ்குமார், குரங்கணி பஞ்சாயத்து தலைவர் ஜெய முருகன், சமூக ஆர்வலர் பலவேசம், கவுன்சிலர் ஆனந்த், துர்க்கை யாண்டி, மாரியப்பன், குமார் பெருமாள், ஜெயசிங், வக்கீல் துர்க்கை ராஜா, கடம்பாகுள பாசன விவசாய சங்க உறுப்பினர் கணேசன், சுதா வீரமணி, ஆல்பர்ட் மற்றும் தென்திருப்பேரை சுற்று வட்டார ஆன்மீக அறக்க ட்டளை பொருளாளர் மாரிதுரை சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சமூக ஆர்வலர் முத்து வீர பெருமாள் நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×