என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரகடம்-வாலாஜாபாத் சாலையில் பண்ருட்டி கண்டிகையில் குண்டும் குழியுமான சாலை
    X

    ஒரகடம்-வாலாஜாபாத் சாலையில் பண்ருட்டி கண்டிகையில் குண்டும் குழியுமான சாலை

    • பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஒரகடம்-வாலாஜாபாத் சாலையில் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை என்ற இடத்தில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் சில உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

    கார் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக வந்து பள்ளத்தை கண்டதும் திடீரென பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனம் மோதி விபத்துகள் ஏற்படுகின்றது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க இப்பகுதி மக்கள் பல முறை நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×