என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி - தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் வழங்கினார்
- தி.மு.க.வின் மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கும் விழா கடையநல்லூரில் நடைபெற்றது
- கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் திறந்து வைத்தார்
தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த தி.மு.க.வின் மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கும் விழா தி.மு.க. சார்பில் கடையநல்லூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் கலந்து கொண்டு கடையநல்லூர் மயிலா நகர் பகுதி சேர்ந்த தி.மு.க. மூத்த முன்னோடி பிச்சைக்கனிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் பொற்கிழிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் செரிப், மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல்காதர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, முன்னாள் நகர செயலாளர் சேகனா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத், கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், கவுன்சிலர் முகைதீன் கனி, அருணாசல பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்