search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
    X

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்திய காட்சி.

    நெல்லையில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

    • பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வ.உ.சிதம்பரனார் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைப்புச்செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே. சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி,

    டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சின்னதுரை, கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு அங்கப்பன், வட்ட செயலாளர் நத்தம் வெள்ளப்பாண்டி, ஜோதி பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா-அ.ம.மு.க.

    நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.ம.மு.க. சார்பில் நிர்வாகிகள் குமரேசன், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஆவின் அண்ணசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் சண்முகராஜ், பொதுக்குழு உறுப்பினர் மணிமூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், துவரை பேச்சிமுத்து பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×