1000 பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம்

1000 பனை விதைகளை விதைக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.இதில் அனைத்து துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பணி விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது.
பணி விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது.
Published on

சீர்காழி:

சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

இந்தக் கல்லூரி வளாகத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் 1987-90-ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து 1000 பனை விதைகள் விதைப்பு செய்யும் பணி நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்து பனை விதையை விதைத்து தொடக்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் குமார், முன்னாள் முதல்வர் தங்கமணி, துணை முதல்வர் ஆரோக்கியராஜ், முன்னாள் மாணவர் ராமகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வெங்கடேசன், உடற்கல்வி இயக்குனர் உமாநாத், கணினி துறை தலைவர் விஜயலட்சுமி, மின்னியல் துறை தலைவர் கீதா மற்றும் அனைத்து துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 1000 பனை விதைகளை விதைக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com