search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயியை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
    X

    விவசாயியை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

    • சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
    • பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே சொத்து தகராறில் விவசா யியை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்ட னை விதித்து கோர்ட் உத்த ரவிட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் ஊராட்சி க்குட்பட்ட நாவலூரைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது67). விவசாயி. இவரது உறவினர் பரமசிவம் மகன் பாக்கியராஜ் (33). இரு குடு ம்பத்தி னருக்கும் பொதுவாக இருந்த நிலத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ப்பிரிவினை செய்யப்ப ட்டது.அதில் தனக்கு முறையாக பங்கு பிரித்து வழங்கவில்லை எனக்கூறிய பாக்கியராஜ் அடிக்கடி தகராறில் ஈடுப ட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் இரவு வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த சிங்காரவேலுவிடம் பாக்கிய ராஜ் வாக்குவாதத்தில் ஈடுப ட்டார். இதில் ஆத்தரமடைந்த பாக்கியராஜ் கட்டையால் சிங்காரவேலுவை தாக்கி னார். இதனால் படுகாய மடைந்த சிங்காரவேலு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ் பெக்டர் (பொ) சுகந்தி வழ க்குப்பதிந்து பாக்கியராஜை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் பாக்கி யராஜ் ஜாமீ னில் வெளியே வந்தார்.இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செந்தில்நாதன் ஆஜரானார். நேற்று இந்த வழக்கை இறுதி விசாரணை செய்த நீதிபதி பல்கீஸ் சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்த பாக்கிய ராஜிக்கு ஆயுள்தண்டனை யும், 500 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தர விட்டார். இதையடுத்து பாக்கியராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    Next Story
    ×