search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
    X

    கலெக்டர் சாரூஸ்ரீ.

    மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

    • மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்கள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிக்கு உரிமம் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கிராமந்தோறும் தனியார் இ சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முனனுரிமை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பெருக்கி கொள்ள உதவிடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் இ-சேவை மையம் உரிமம் இயக்குவதற்கு வழங்கப்படவுள்ளது.

    அரசு விதிகளின்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ; https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறது.

    விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திற னாளி ஆப்ரேட்டர்கள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணிணியில் நல்ல அறிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்கவேண்டும்.

    இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணிணி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசியமாகும்.

    குறைந்த பட்சம் 2 எம்பிபிஎஸ் அலைவரி சையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்யவேண்டும், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் மையம் அமைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகளாக தெரிவிக்கப்ப டுகிறது.

    தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்று த்திறனாளி ஆபரேட்டர்க ளுக்கு ஐனு எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    படித்த கணிணி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் வைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×