search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
    X

    காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

    • மாட்டுப் பொங்கல் விடுமுறை நாளான இன்று அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி வாங்க ஆர்வம் காட்டினர்.
    • அசைவ பிரியர்களின் கூட்டத்தால் ஞாயிற்று கிழமை போல காசிமேடு மீன்பிடி துறைமுகம் காட்சி அளித்தது.

    ராயபுரம்:

    பொங்கல் பண்டிகை விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி வாங்குவது வழக்கம். இதனால் காசிமேடு மீன் மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டத்தால் களை கட்டும்.

    ஆனால் நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்தனர். இதனால் காசிமேடு பகுதி நேற்று வழக்கமான பரபரப்பு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் மாட்டுப் பொங்கல் விடுமுறை நாளான இன்று அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி வாங்க ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக காசிமேடு மீன் ஏலம் விடும் பகுதியில் அதிகாலை 2 மணி முதலே சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் மீன் வாங்க திரண்டனர்.

    வழக்கத்திற்கு மாறாக திங்கட்கிழமையான இன்று கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் ஏராளமானோர் மீன் வாங்க குவிந்ததால் விற்பனை களை கட்டியது.

    அசைவ பிரியர்களின் கூட்டத்தால் ஞாயிற்று கிழமை போல காசிமேடு மீன்பிடி துறைமுகம் காட்சி அளித்தது.

    எனினும் மீன் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. கடந்த வாரத்தில் ரூ.900-க்கு விற்ற வஞ்சிரம் மீன் இன்று ரூ.1500-க்கும், ரூ.600-க்கு விற்ற வவ்வாள் மீன்-ரூ.900-க்கும், ரூ.450-க்கு விற்ற சங்கரா ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் பழவேற்காடு மீன் ஏல கூடத்திலும் மீன் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலை வழக்கத்தை விட இரு மடங்கு உயர்ந்து காணப்பட்டது.

    Next Story
    ×