search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டூரில் நெல் திருவிழா
    X

    தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், மாட்டு வண்டி ஓட்டி வந்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கோட்டூரில் நெல் திருவிழா

    • பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
    • விவசாயிகள் இந்த ஆண்டு இயற்கை விவசாயம் செய்வதாக உறுதியேற்றுக் கொண்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் விதைகளே பேராயுதம் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு நெல் திருவிழா நடைபெற்றது.

    சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாலன் அனைவரையும் வரவேற்றார்.

    இயற்கை விவசாயம் மற்றும் சூழலியல் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் பாண்டித்துரை உரையாற்றினார்.

    தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இயற்கை விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அழிந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளை சென்றடையும் நோக்கில் பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

    இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் வகைகள் வழங்கப்பட்டது .

    விவசாயிகளும் இந்த ஆண்டு இயற்கை விவசாயம் செய்வதாக உறுதியேற்றுக் கொண்டனர். வேளாண் இயந்திரங்கள் மற்றும் மரபு சார்ந்த வேளாண் கண்காட்சியும் நடைபெற்றது.

    முடிவில் பொருளாளர் ஜான்பால் நன்றி கூறினார்.

    முன்னதாக கோட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய மாட்டு வண்டி ஊர்வலத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஓட்டி வந்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×