search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வடமாநில வாலிபர் போக்சோவில் கைது
    X

    சூலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வடமாநில வாலிபர் போக்சோவில் கைது

    • காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்
    • ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்தவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்

    சூலூர்,

    சூலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி கூலிவேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.

    இதற்கிடையே காதலி கர்ப்பமானது தெரியவந்ததும் அந்த வாலிபர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு தப்பி சென்று விட்டார். இதுதொடர்பாக சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சிறுமியை கர்ப்பமாக்கி தப்பி சென்றது ஓம்பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஓம்பிரகாஷை கைதுசெய்து கோவைக்கு அழைத்து வந்து, சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

    Next Story
    ×