பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

குமாரபாளையம் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
.
.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளி–யில் வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் முழு ஆண்டு  தேர்வுகள் நடை–பெற்று வருகிறது.

 கடந்த 5-ந்தேதி தொடங்கிய தேர்வுகள்  13-ந்தேதி நிறைவு பெற உள்ளது.  காலை நேரங்களில் 1,3,5 வகுப்புகளுக்கும், மாலை நேரங்களில் 5,7,8 வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த பள்ளிக்கு நேற்று வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் திடீர் என்று வந்தார்.  அவர் தேர்வுப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது தலைமை ஆசிரியை சுகந்தி உள்ளிட்ட ஆசிரியைகள் பலர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com