குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார் பொருத்தும் பணி தொடக்கம்

குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மின் மோட்டார் பொருத்தும் பணி தொடக்கம்.
மோட்டார் பொருத்தும் பணியை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்ட காட்சி.
மோட்டார் பொருத்தும் பணியை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்ட காட்சி.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் காவேரி நகர் நீரேற்று நிலையத்தில் 50 எச்.பி. மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கபட்டு வந்தது. 

இது போதுமானதாக இல்லை என்பதால் ரூ.23 லட்சம் மதிப்பில் 60 எச்.பி. மோட்டார் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகளை சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதில்  பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், விஜயா, சியாமளா, ரேவதி, கிருஷ்ணவேணி, புஷ்பா, செல்வி, நந்தினிதேவி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்  உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com