search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதம மந்திரி நிதி உதவி பெற ஆதார் இணைப்பு கட்டாயம்
    X

    பிரதம மந்திரி நிதி உதவி பெற ஆதார் இணைப்பு கட்டாயம்

    • பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
    • எனவே இவ் விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கே.ஒய்.சி. சரி பார்ப்பு பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல், மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 4,831 விவசாயிகள் இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்படாமல் நிலுவை யில் உள்ளது. எனவே இவ் விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கே.ஒய்.சி. சரி பார்ப்பு பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.

    மேலும் 4,744 விவசாயி கள் தங்களது பயன்பாட்டி லுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவ ரங்களை இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள் ளது. எனவே ஆதார் விவ ரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளி களுக்கு பிரதமரின் விவசாயி களுக்கான நிதி உதவி திட்டத்தின் 14-வது தவணை தொகை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆதார் விவ ரங்களை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் 14-வது தவணைத் தொகையினை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவ ரங்களை இணைத்திட வேண்டும். இல்லையெனில் அருகிலுள்ள அஞ்சல் அலு வலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.

    மேலும் அஞ்சல் அலுவல கங்களில் வங்கி கணக்கு தொடங்கும் பொழுது 48 மணி நேரத்திற்குள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×