search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    • காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கலெக்டர் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×