என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டரை தாக்கிய தொழிலாளி கைது
    X

    தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டரை தாக்கிய தொழிலாளி கைது

    • டாக்டர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரிகாலனை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் கரிகாலன் (வயது 42). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கபட்டார்.

    இந்நிலையில் கரிகாலன் தனது கையில் உள்ள ஊசி செலுத்தும் வென்ப்ளானை கழட்டி வீசி உள்ளார். அப்போது ஊசி செலுத்த சென்ற பயிற்சி பெண் டாக்டர், இது பற்றி கேட்டார். அப்போது கரிகாலன் திடீரென பயிற்சி டாக்டரை தாக்கினார்.

    இது குறித்து டாக்டர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரிகாலனை கைது செய்தனர். இந்த சம்பவம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×