லாட்ஜில் தங்கியிருந்த சினிமா ஒளிப்பதிவாளர் சாவு

லாட்ஜில் தங்கியிருந்த சினிமா ஒளிப்பதிவாளர் இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்ஜில் தங்கியிருந்த சினிமா ஒளிப்பதிவாளர் சாவு
Published on

மதுரை

சென்னை திருப்போரூர் நொம்மேலியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் சரத்குமார்(வயது29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் உதவி காமிராமேனாக பணியாற்றி வந்தார்.

மதுரையில் உள்ள குறும்பட தயாரிப்பு நிறுவ னத்தில் பணியாற்று வதற்காக வந்திருந்த அவர், கூடலழகர் பெருமாள் கோவில் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார்.

ஏற்கனவே அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்தநிலையில் அறையில் தங்கியிருந்த சரத்குமார் பிணமாக கிடந்துள்ளார்.

இது குறித்து அவரது அண்ணன் சதீஷ்குமார், திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் உடல் நல பாதிப்பால் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com