என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
- எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார்.
திருப்பரங்குன்றம்
எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் 16-வது ஆண்டு நோட்டு புத்தகம் வழங்கும் விழா ஹார்வி பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் சக்தி வேல், அண்ணாமலை, வள்ளியப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மன்ற செயற்குழு உறுப்பினர் வேட்டையார் வரவேற்றார். பாண்டியராஜன் தொடக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.கே.ராஜேந்திரன், பாண்டியன் நகர் குடி யிருப்போர் நல சங்க தலைவரும், சமூக ஆர்வலரு மான வ.சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர்.
இதில் மாமன்ற உறுப்பி னர்கள் இந்திரா காந்தி, விஜயா, தென் மண்டல ெரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.பி.சிவசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவர் பொன்.மனோகரன், மன்ற துணைத் தலைவர் காளிதாஸ், ஹார்விபட்டி அரவிந்தன், குலசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்