பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடந்தன.கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
Published on

மதுரை

மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு பேச்சு போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்க வளாக கூட்டரங்கில் நடந்த போட்டிகளில் 26 பள்ளி மாணவர்களும், 14 கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

இதில் பள்ளிகள் பிரிவில் பொன் முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி குருவம்மாள், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெய்ஸ்ரீ, தோப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி தீப்தி ஆகியோர் பரிசு முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி ஷர்மிகா, டி.கல்லுப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமதர்ஷினி ஆகியோர் பெற்றனர்.

கல்லூரி அளவில் செந்தமிழ்க் கல்லூரி மாணவி ராஜமாலதி, மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகக் கல்லூரி மாணவர் வெங்கடேஷ், மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி மங்கையர்க்கரசி ஆகியோர் முதல் 3 பரிசுகளை வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டரிடம் பெற உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com