search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் சாவு
    X

    மாணவர் நிதிஷ்.

    விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் சாவு

    • விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் இறந்ததால் பரபரப்பு நிலவியது.
    • கொட்டாம்பட்டி போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பூமங்களப்பட்டியைச் சேர்ந்தசெந்தமிழ்ச்செல்வன் -சுமங்கலி ஆகியோரின் மகன் நிதிஷ் (வயது 12) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நிதிஷ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளியில் இருந்த போதுஅவனை ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது. இதில் அவனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நிதிஷை கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மதுரையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிதிஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    மாணவர் இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மதுரை-திருச்சி மெயின் ரோட்டில் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்.பி. பிரபாகரன் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பள்ளியில் மாணவனுக்கு விஷப்பூச்சி கடித்ததால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கூறினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டம் காரணமாக 1 மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    Next Story
    ×