search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
    X

    அலங்காநல்லூரில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் தேவர் சிலைக்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

    • தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
    • தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ் பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஒன் றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், ஒன்றிய இளை ஞரணி சந்தனகருப்பு, மாணவரணி யோகேஷ், பொறியாளர் அணி ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைமையில் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், ஒன்றிய செய லாளர் கண்ணதாசன், ஒன்றிய தலைவர் திருப்பதி, கல்லணை மூக்கையா, பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் சுப்பா ராயலு தலைமையில் செயற் குழு உறுப்பினர் ஜெயமணி, முன்னாள் வட்டார தலை வர் மலைக்கனி ஆகி யோர் முன்னிலையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்ப்பில் மண்டல் தலை வர்கள் சுபாஷ், தங்கதுரை தலைமையில் மாவட்ட பொது செயலாளர் கோவிந்த மூர்த்தி, முன்னி லையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×