search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
    X

    மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை நகர்மன்ற தலைவி ரம்யா முத்துக்குமார் வழங்கினார். 

    மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

    • திருமங்கலத்தில் 331 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை நகர்மன்றத்தலைவர் வழங்கினார்.
    • பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    தமிழகத்திலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்லும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்331 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகர கழகச் செயலாளர் ஸ்ரீதர், நகர் மன்றத்துணைத் தலை வர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கமிட்டி செயலர் சரவணன், தலைவர் பார்த்திபன், பொருளாளர் காமராஜ், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிராஜன் மற்றும் பள்ளியின் டைரக்டர்கள், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Next Story
    ×