search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறைச்சி விற்பனைக்கு தடை
    X

    இறைச்சி விற்பனைக்கு தடை

    • மதுரையில் 5-ந் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் அரசாணையின்படி புத்தர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×