search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்காரர் மீது தாக்குதல்
    X

    போலீஸ்காரர் மீது தாக்குதல்

    • போலீஸ்காரர் மீது தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.
    • சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள நகரி 4 வழிச்சாலையில் சம்பவத் தன்று சோழவந்தான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு சென்றவர்கள் விதிகளை மீறி பொதுமக்களை அச்சு றுத்தும் வகையில் கூச்ச லிட்டபடி சென்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் போலீஸ்காரர்களிடம் தகராறு செய்து தாக்கியது அம்பலத்தடி கிராமத்தை சேர்ந்த அசோக்கு மார்(வயது21), பிள்ளை யார்நத்தம் கிராமத்தை சேர்ந்த திருச்செந்தில்(20) ஆகிய 2 பேர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×