search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி-சொக்கநாதர்கோவிலில் ஆருத்ரா தரிசனம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள்

    மீனாட்சி-சொக்கநாதர்கோவிலில் ஆருத்ரா தரிசனம்

    • மீனாட்சி-சொக்கநாதர்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி - சொக்கநாதர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்திகளான நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அபிஷேகம்

    பால், தயிர் சந்தனம், சீயக்காய், திராட்சை, தேன், நெய், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீரால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை நடை பெற்றது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் சங்கர் பட்டர் செய்தார். அப்போது மாணிக்க வாசகரின் திரு வெண்பாவை பாடல்களை பக்தர்கள் பாடினர்.

    ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி யை காண திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவ ருக்கும் திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப் பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி அங்கயற்கன்னி விழாவிற்கான ஏற்பாடு களை செய்திருந்தார்.

    Next Story
    ×