உடுமலையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா

கால்நடை வளர்ப்புக்கான கடன் பெற்றவர்களுக்கு, கடனுக்கான ஆணை வழங்கப்பட்டது. 1,132 விவசாயிகளுக்கு 4.59 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஆணை வழங்கப்பட்டது.
கடனுக்கான ஆணை வழங்கியதை படத்தில் காணலாம்.
கடனுக்கான ஆணை வழங்கியதை படத்தில் காணலாம்.
Published on

உடுமலை :

உடுமலையில், 'பாங்க் ஆப் பரோடா' கோவை மண்டல அலுவலகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கடன் முகாம் நடந்தது.வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சரவணகுமார், மண்டல துணை பொது மேலாளர் சலபதி தலைமை வகித்தனர். சுகுணா புட்ஸ் நிறுவன முதுநிலை மேலாளர் அருளாந்தகிருஷ்ணன், கால்நடைத்துறை இணை இயக்குனர் பாரிவேந்தன் முன்னிலை வகித்தனர்.

கால்நடை வளர்ப்புக்கான கடன் பெற்றவர்களுக்கு, கடனுக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு கிளைகளில் 1,132 விவசாயிகளுக்கு 4.59 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஆணை வழங்கப்பட்டது. நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை பரோடா வங்கி கோவை மண்டல துணை பொது மேலாளர் ககதால், உடுமலை கிளை முதன்மை மேலாளர் கே.மாரிராஜ் மற்றும் கிளை ஊழியர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com