search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10 லட்சம் மதிப்பில் ஏரி புணரமைப்பு பணி
    X

    ஏரி புணரமைப்பு பணி நடந்த காட்சி.

    ரூ.10 லட்சம் மதிப்பில் ஏரி புணரமைப்பு பணி

    • மாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது.
    • ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது. இது சிறுக, சிறுக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த கரைகள் முற்றிலும் சேதமானது. இதனால் மழை நீர் வந்தால் தேங்காமல் வீணாக சென்று விடுகிறது.

    இதனை புதிதாக கரை கட்டி தண்ணீர் சேமித்து வைக்க இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஊராட்சி தலைவி புஷ்பா இதற்கான முயற்சி எடுத்து, ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் மழை நீர் நின்றால், இப்ப குதி விவசாய கிணறுகளில் நீர் பெருகும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலை யில் இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கவலையில்லாமல் விவசாயம் செய்ய உதவியாக இருக்கும். கால்ந டைகளுக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும்.

    Next Story
    ×