search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி
    X

    கருமத்தம்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி

    • தொழிலாளி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கிறார்கள்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ருக்குமணி(26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 4 நாட்களாக ஆனந்தகுமார் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது தீடீரென மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்த வர்கள் உடனடியாக ஆனந்தகுமாரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருமத்த ம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×