search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற எஸ்.ஆர். பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
    X

    கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற எஸ்.ஆர். பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

    • கலைத்திறன் போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
    • வெற்றி பெற்ற எஸ்.ஆர். பள்ளி அணியினருக்கு பாிசு, கேடயம் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோாி மற்றும் பாரத் வித்யா மந்திா் உள்ளிட்ட பாரத் கல்வி குழுமத்தின் சாா்பில் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    போட்டியில் எஸ்.ஆர். பள்ளி குழுநடனம், ஆடையலங்காரம், புதிா் போட்டி, கணித ஒலிம்பியாய்டு, மாஸ்டா் பெகாசஸ் போன்ற போட்டிகளில் முதல் இடத்தையும், வண்ணம் தீட்டுதல், புத்தக உறை தயாாித்தல் போன்ற போட்டிகளில் 2-ம் இடத்தையும், படக்கதை ஒருங்கிணைத்தல், வாா்த்தை விளையாட்டு, குழுப்பாடல், வினாடி-வினா போன்ற போட்டிகளில் 3-வது இடத்தையும் பெற்று இளையோா் பிாிவில் 3-ம் இடமும், ஒட்டுமொத்த அளவில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் அணியினா் 2-ம் இடமும் பெற்றனா்.

    வெற்றி பெற்ற எஸ்.ஆர். பள்ளி அணியினருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பாிசு, வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை இலஞ்சி ஆக்ஸஸ் வங்கியின் முதன்மை மேலாளா் மாாியப்பன், பாரத் கல்விக் குழுமத்தின் செயலாளா் காந்திமதி மோகன கிருஷ்ணன் ஆகியோா் இணைந்து வழங்கினா். எஸ்.ஆர். பள்ளி செயலருக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவா்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி ஆகியோா் பாராட்டினா்.

    Next Story
    ×