என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம் பெண் மர்ம மரணம்- அடித்து கொலை செய்ததாக பெற்றோர் புகார்
- கயல்விழி வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அருகே இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மோவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கயல்வேந்தன். அந்தமானில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி (29). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகியது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கயல்விழி வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். அவர் கையில் அணிந்திருந்த வளையல்கள் உடைந்து காணப்பட்டது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கயல்விழி மாமனார், மாமியார் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆனால் கயல்விழி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கயல் விழி தந்தை வீரமுடையான் நத்தத்தை சேர்ந்தஅருள் பிரகாசம், தாய் மகாலட்சுமி ஆகியோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதில் தனது மகளை அவரது மாமனார் செங்குட்டுவன், மாமியார் பானுமதி ஆகியோர் கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், அவர்கள் தனது மகளை அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான 4 வருடத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






