search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா
    X

    திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

    • 106 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    திருவட்டார், நவ.20-

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் 106 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி, வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார், காட்டாத்துறை ஊராட்சி மன்றத்தலைவர் இசையாஸ், மாவட்ட நிர்வாகிகள் ஆற்றூர் குமார், ஜாண் இக்னேசியஸ், பென்னட், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஏசுராஜன், கண்ணனூர் ஜோண், ஆற்றூர் ஜாண் வெர்ஜின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×