கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக ஜான்தங்கம் நியமனம்: எடப்பாடி பழனிசாமி

ஜான்தங்கத்தை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணியை தொடங்கி வைத்து சர்ச்சை.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக ஜான்தங்கம் நியமனம்: எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பொறுப்பு வகித்த தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அங்கு நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணியை தொடங்கி வைத்தது சர்ச்சையானது.

இதையடுத்து அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் தற்காலிக பொறுப்பாளராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கத்தை நியமித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com