குமரி மாவட்டத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

மருந்து நிறுவனம் மற்றும் செங்கல் சூளை அதிபர் வீடு - மண்டபம் உள்பட 20 இடங்களில் நடந்தது வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்று வருமான வரி துறைக்கு புகார்
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த வாகனம்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த வாகனம்.
Published on

கன்னியாகுமரி:

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள் சொத்துக் களை வாங்கியதில் முறை கேடு செய்திருப்பதாகவும் வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்றும் வருமான வரி துறைக்கு புகார்கள் வந்துள் ளன.

அதன் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஓட்டல் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே கட்டமாக சோதனை நடத்தினர்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திரன். இவருக்கு ஏராளமான கல் குவாரிகள் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன.

மேலும் மார்த்தா ண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.

தொழில் அதிபர் ராே ஜந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதுபோல களியக்கா விளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவல கத்திலும் இன்று வருமான வரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.

இதுபோல நாகர் கோவில் பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் என 5 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com