search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    புத்தளம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த காட்சி.

    குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தீவிர கண்காணிப்பு
    • இந்து அமைப்பினர் போராட்டம் எதிரொலி

    நாகர்கோவில்:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திரு விழாவின்போது ஹைந்துவ சங்கம் சார்பில் நடைபெற இருந்த சமய மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்து அறநிலைய துறை சார்பில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஹைந்துவ சங்கம் சார்பில் நடைபெற இருந்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. திட்டமிட்டபடி ஹைந்துவ சங்கம் சார்பில் சமய மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    சமய மாநாடு நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடந்தது. இந்த நிலையில் இன்று மண்டைக்காடு பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    போராட்டத்திற்கு போலீ சார் அனுமதி மறுத்தி ருந்தனர். தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து போராட்டத்திற்கு வருபவர்களை தடுக் கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மண்டைக்காட்டில் நடை பெறும் போராட்டத்திற்கு கலந்து கொள்ள வருப வர்களை அந்தந்த பகுதி களில் கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்டை காட்டிற்கு செல்லும் பாதை பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் இன்று காலை முதலே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் பறக்கை விலக்கு, புத்தளம், மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்து அமைப்பினர் போராட்டத் திற்கு அனுமதி கிடைக்கா ததால் வேறு தேதியில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×