search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாக்கமங்கலத்தில் போலீஸ் மீது தாக்குதல்
    X

    கோப்பு படம் 

    ராஜாக்கமங்கலத்தில் போலீஸ் மீது தாக்குதல்

    • 3 பெண்கள் கைது
    • நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்.

    இவர் அனந்த நாடார்குடி பகுதியில் வசித்து வருகிறார் அவரது பக்கத்து வீட்டில் புத்தளத்தை சேர்ந்த அய்யாவு என்பவர் குடும்பத்துடன் வசித்து வரு கிறார். இரு வீட்டருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வருகிறது. சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் வீட்டுக்கும் அய்யாவு வீட்டிற்கும் தகராறு நடந்தது. இது தொடர்பாக தமிழ்செல்வனின் மனைவி ஜாக்குலின் ராஜாக்கமங்க லம் போலீசார் புகார் கொடுத்தார்.

    இந்த புகார் மனுவின் மீது விசாரணை நடத்துவது வதற்காக ராஜாக்கமங்கலம் எஸ்.ஐ. ஜார்ஜ் பிரேம்லால் மற்றும் தலைமை காவலர் சுதாகர் ஆகியோர் ஆனந்தநாடார் குடிக்கு சென்று அய்யாவு வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது அய்யாவு மகன் பார்த்தசாரதி என்பவரை போலீஸ் நிலையம் செல்ல வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். இந்த நேரத்தில் அய்யாவு அவரது மகன் பார்த்தசாரதி மற்றும் அவரது மனைவி கலா மற்றும் சரண்யா, சந்தியா ஆகியோர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி அவரது சட்டையும் கிழித்தனர். இதில் போலீஸ் ஏட்டு சுதா கர் காயம் அடைந்து உள்ளார்.

    இச்சம்பவம் குறித்து உடனடியாக ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜாக்கமங்கலம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் அவர்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக ஏட்டு சுதாக ரனை சேர்த்தனர். அந்த நேரத்தில் அய்யாவும் மற்றும் அவரது மகன் பார்த்தசாரதி ஆகியோர் வீட்டின் பின்பக்கமாக தப்பி சென்று விட்டனர். இதனால் போலீசார் அவர் களை கைது செய்ய முடிய வில்லை.

    பின்னர் நேற்று கலா மற்றும் அவரது மகள்கள் சரண்யா, சந்தியா ஆகி யோரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை நாகர் கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவர் களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×