என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் ஐ.டி. ஊழியர் பலி
- ஆரோக்கியராஜா ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பன்னிமடை அருகே உள்ள தென்றல் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜா (வயது 45). ஐ.டி. ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று ஆரோக்கிய ராஜா குன்னூரில் உள்ள தனது அக்கா மகள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். செல்லும் வழியில் அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமா ஜார்ஜ் பாலன் என்பவரது வீட்டிற்கு சென்றார்.
அவர் வளர்த்து வரும் ஆடுகள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எனவே ஆடுகளை தேடி ஜார்ஜ் பாலன் வெளியே சென்றார். அவருடன் ஆரோக்கிய ராஜாவும் சென்றார். கல்லாறு ரெயில்வே பாலத்தில் ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் ஆரோக்கிய ராஜா தவறி விழுந்தார்.
இதில் அவரது விலா எலும்பு உடைந்தது. உயிருக்கு போராடிய ஆரோக்கிய ராஜாவை அவரது மாமா மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆரோக்கிய ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்