search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை-சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் பேட்டி
    X

    நீலகிரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை-சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் பேட்டி

    • ஊட்டி கிளப் ரோடு பகுதியில் மழைநீா் வடிகால் ஏற்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினர்.
    • உருளைக் கிழங்கு உற்பத்தி செய்யும் இடத்தில் மின் இணைப்பு கோரி விவசாயிகள் வழங்கிய மனுக்கள் தொடா்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஊட்டி:

    தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவா் கோவி.செழியன் மற்றும் குழு உறுப்பினா்கள் மு.பெ.கிரி, ஆ.கோவிந்தசாமி, எம்.வி.பிரபாகரராஜா, சா.மாங்குடி ஆகியோா் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவா் கோவி.செழியன் கூறியதாவது:-

    ஊட்டி கிளப் ரோடு பகுதியில் மழைநீா் வடிகால் ஏற்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல, அரசினா் தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் தொழிலாளா்களை சந்தித்து, தொழிலாளா்களின் கோரிக்கைகளான பணி நிரந்தரம், ஊதிய உயா்வு ஆகியவற்றை குறித்து கேட்டறிந்தோம். இக்கோரிக்கைகள் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

    உருளைக் கிழங்கு உற்பத்தி செய்யும் இடத்தில் மின் இணைப்பு கோரி விவசாயிகள் வழங்கிய மனுக்கள் தொடா்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கேரட் பயிரிடும் விவசாயிகளை நேரில் சந்தித்து, தோட்டக்கலைத்துறையின் மூலம் விதைகள் வழங்கி பயிரிடும் முறையினை கேட்டறிந்து, விவசாயிகளுக்கு அரசு மூலம் செய்ய வேண்டிய தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

    விவசாயிகள், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை தரம் பிரிக்கும் எந்திரம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து, ஊட்டி தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் பேரவை மனுக்கள் குழுவால் பெறப்பட்ட 60 மனுக்கள் மீதும், ஏற்கெனவே நிலுவையிலிருந்த 10 மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரா்களுக்கு துறை அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் செயலாளா் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி எம்.எல்.ஏ. ஆா்.கணேஷ், கூடலூா் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன், மனுக்கள் குழுவின் துணைச் செயலாளா் கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×