search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்- 50 பேர் கைது
    X

    நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டகாட்சி.

    நெல்லையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்- 50 பேர் கைது

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடக்கிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, வேலை யின்மை அதிகரிப்பு, இந்தி திணிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மறியல் போராட்டம் நடக்கிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் இன்று நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் காசி விஸ்வ நாதன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் லெட்சுமணன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    50 பேர் கைது

    தொடர்ந்து பா.ஜ.க அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

    இந்த போராட்டத்தில் பாளை, தச்சை மண்டலங்கள் மற்றும் பாளை ஒன்றியக்குழு நிர்வாகிகள் ரங்கன், சடை யப்பன், முருகன், சபியா, சுரேஷ், பரமசிவன், பாலு, அப்துல் காதர், பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தொடர் மறியல் போராட்டமானது நாளை வள்ளியூரிலும், நாளை மறுநாள் அம்பை யிலும் நடக்கிறது.

    பேட்டி

    போராட்டத்தின்போது நிருபர்களிடம் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநில தலைவர் காசி விஸ்வநாதன் கூறியதாவது:-

    யாரிடமும் கேட்காமல் இந்தியாவின் பாரம்பரிய மான பெயரை பாரத் என ஜி-20 உச்சி மாநாட்டில் மத்திய அரசு மாற்றி உள்ளது. வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்திய நாட்டை காப்பதற்கு எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

    மாநாடு நடைபெறும் டெல்லி பகுதியில் வறுமை யின் கீழ் உள்ள மக்களை மூடி மறைக்கும் செயலாக தார்பாய்கள் கட்டி அவர்கள் வசிக்கும் வாழ்விடங்களை மத்திய அரசு மூடி உள்ளது.

    நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை கட்டுக்கடங் காமல் இருந்து வரும் நிலை யில் இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×