search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் தூத்துக்குடி வருகை
    X

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நாகலாந்து கவர்னர் இல. கணேசனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா. ஜ. க. சார்பாக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். அருகில் பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், ரமேஷ் உள்ளனர்.

    நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் தூத்துக்குடி வருகை

    • நாகலாந்து மாநில கவர்னர் இல. கணேசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.
    • இன்று மாலை தூத்துக்குடி யில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் ‘இந்தியாவின் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

    தூத்துக்குடி:

    நாகலாந்து மாநில கவர்னர் இல. கணேசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.

    அவருக்கு தமிழக பா.ஜ.க. வர்த்தக அணி தலைவர் ராஜா கண்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், பொதுச் செயலாளர் உமரி சத்திய சீலன், விவேகம் ரமேஷ், வீரமணி, மாதவன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்த னர்.

    அப்போது நிருபர்களை சந்தித்த கவர்னர் இல.கணேசன் 'அனைவருக்கும் வணக்கம், பேட்டி வேண்டாம்' என கூறிவிட்டு அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார்.

    இன்று மாலை தூத்துக்குடி யில் அகில இந்திய வர்த்தக தொழி ற்சங்கத்தில் தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் 'இந்தியாவின் முன்னேற்றம்' என்ற தலைப்பில் நடைபெற உள்ள கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

    கவர்னர் இல. கணேசன் வந்த அதே விமானத்தில் மொரிசியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங்கும் தூத்துக்குடி வந்தார். பின்னர் அவர் நெல்லையில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×