search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை ஓட்டலில் பெண் ஊழியர் மர்மச்சாவு
    X

    பாளை ஓட்டலில் பெண் ஊழியர் மர்மச்சாவு

    • முருகன்குறிச்சியில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் சரஸ்வதி வேலை பார்த்து வந்தார்.
    • சரஸ்வதி எப்படி உயிரிழந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ரெங்க நாதபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் பாளை முருகன்குறிச்சியில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வேலைக்கு வந்த சரஸ்வதி ஓட்டலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சரஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரஸ்வதி எப்படி உயிரிழந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சரஸ்வதி உயிரிழந்ததை அறிந்து அவரது உறவினர்கள், தமிழர் விடுதலைகளம் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, பாளை ஓட்டலில் பாதுகாப்பற்ற முறையில் பணியில் ஈடுபட்டதாலேயே சரஸ்வதி உயிரிழந்துள்ளார். எனவே இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×