search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    • நாளை (செவ்வாய்க்கிழமை ) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • கூட்டுறவு, மின்சாரம் போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை ) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, நீா்ப்பாசனம், வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம் போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னா் மனுக்களை அளிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×