கூடுதல் ஆசிரியர்களை நியமிக்ககோரி மாணவர்கள்-பெற்றோர் போராட்டம்

சத்தியமங்கலம் அருகே அரசுநடுநிலைபள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி இன்று காலை போராட்டம் நடந்தது.
பள்ளி முன்பு போராட்டம் நடத்திய மாணவர்கள்
பள்ளி முன்பு போராட்டம் நடத்திய மாணவர்கள்
Published on

கூடுதல் ஆசிரியர்களை நியமிக்ககோரி  மாணவர்கள்-பெற்றோர் போராட்டம்

சத்தியமங்கலம்:

 சத்தியமங்கலம் அருகே அரசுநடுநிலைபள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி இன்று காலை போராட்டம் நடந்தது.

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையத்தில் 6-ம் வகுப்பு முதல் 8&ம் வரை செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 126 மாணவ,மாணவிகள்படித்து வருகின்றனர். இவர்களுக்கு  பாடம் நடத்த 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்தநிலையில் ஒரு ஆசிரியர் இன்னும் சில நாட்களில் பணி ஓய்வு பெறபோகிறார்.

இந்தநிலையில் இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி இன்று மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒன்று திரண்டு பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.

மேலும் மாணவர்கள் பள்ளி முன்பு  அமர்ந்து  பாடம் படித்துக் கொண்டும் எழுதி கொண்டும் இருந்தனர். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் போராட்டம் பற்றி தெரியவந்ததும் கல்வி அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம் காரணமாக பள்ளி முன்பு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com